புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்! - பகுதி 2 : Detective riddles part 2

புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்!-பகுதி 2

உங்கள் அறிவை உபயோகப்படுத்த அல்லது சோதிக்க ஒரு வாய்ப்பு!

கீழே உள்ள புதிர்களுக்கு பதில்களை உங்களால் முடிந்த வரை கண்டுபிடித்து சரியாக இருந்தால் சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்!! உங்கள் பதில் தவறாக இருந்தால் பரவாயில்லை தெரிந்துகொள்ளுங்கள்!!!  

பள்ளியில் கொலை:

பள்ளிக்கு முதல் நாள், யாரோ வரலாற்று ஆசிரியரைக் கொன்றுவிட்டனர். பள்ளிக்கூடத்தில் நான்கு பேர் மேல் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் இயற்கை அழகுபடுத்துபவர், கணித ஆசிரியர், கூடைப்பந்து பயிற்சியாளர் மற்றும் முதல்வர். 



கொலை நடத்த நேரத்தில் அவர்கள் செய்துகொண்டு இருந்ததாக கூறியது:

புல்வெளியை வெட்ட வெளியில் இருந்ததாக இயற்கை அழகுபடுத்துபவர் கூறினார்.

மாணவர்களுக்கு தேர்வு நடத்திக்கொண்டு இருந்ததாக கணித ஆசிரியர் சொன்னார்.

கூடைப்பந்து பயிற்சியாளர் தனது வீரர்களுடன் பயிற்சிகளை நடத்திக்கொண்டு இருந்ததாக கூறினார்.

அவர் அலுவலகத்தில் இருந்ததாக முதல்வர் கூறினார்.

அவர்களின் பதில்களை கேட்ட போலீசார் கொலையாளியை உடனடியாக கைது செய்தனர். வரலாற்று ஆசிரியரை கொன்றது யார், போலீசாருக்கு எப்படி தெரியும்?


பதில்:



கணித ஆசிரியர் தான் வரலாற்று ஆசிரியரைக் கொன்றார். அவர் மாணவர்களுக்கு தேர்வை நடத்துவதாகக் கூறினார், ஆனால் அது பள்ளியின் முதல் நாள். பள்ளியின் முதல் நாள் யாரும் தேர்வு நடத்த மாட்டார்கள்.


விஷ மாத்திரைகள்:



ஒரு சீரியல் கொலைகாரன் ஐந்து வெவ்வேறு நபர்களை கடத்தி ஒவ்வொருவர் கையிலும்  இரண்டு மாத்திரைகள் மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீருடன் உட்கார வைத்தான். அவன்  ஒவொருவரையும் ஒரு மாத்திரையை சாப்பிடச் சொன்னார், ஆனால் ஒரு மாத்திரை விஷம் என்றும் மற்றொன்று பாதிப்பில்லாதது என்றும் எச்சரித்தார். பாதிக்கப்பட்டவர் எந்த மாத்திரையை சாப்பிடவில்லையோ, அதை சீரியல் கில்லர் சாப்பிடுவார். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் எப்படியாவது விஷ மாத்திரையைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு இறந்தனர். சீரியல் கில்லர் அவர்கள் அனைவரையும் விஷத்தை சாப்பிட வைத்தது எப்படி?


பதில்:




இரண்டு மாத்திரைகளிலும் விஷம் இல்லை. பாதிக்கப்பட்ட அனைவரும் மாத்திரையை விழுங்கும் போது குடித்த தண்ணீரில் விஷம் இருந்தது.


தேனிலவு மர்மம்:




ஒரு ஜோடி தேனிலவுக்கு ஹவாய் தீவுக்குச் சென்றது. துரதிர்ஷ்டவசமாக, அவரது மனைவி ஒரு பயங்கரமான படகு விபத்தில் இறந்ததால் கணவர் தனியாக வீடு திரும்பினார். அவர் பயணத்தை பதிவு செய்த பயண முகவரை தொடர்பு கொண்ட போலீசார், அவரது மனைவியை கொலை செய்ததற்காக அவரை கைது செய்தனர். அவர்தான் அவர் மனைவியை கொலை செய்தார் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? 


பதில்:




அவர் ஹவாய் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது திரும்பி வருவதற்கு அவருக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். 


அறிவியல் வழக்கு:




ஒரு வேதியியலாளர் தனது சொந்த ஆய்வகத்தில் படுகொலை செய்யப்பட்டார். ரசாயனப் பொருட்களின் பெயர்கள் எழுதப்பட்ட ஒரு துண்டு காகிதம் மட்டுமே ஆதாரம். காகிதத்தில் எழுதப்பட்ட ரசாயன பொருட்கள் nickel, carbon, oxygen, lanthanum, and sulfur. கொலை நடந்த நாளில் வேதியியலாளர் ஆய்வகத்திற்கு நான்கு பேர் மட்டுமே வந்தனர்: சக விஞ்ஞானி கிளாரி, அவரது மருமகன் நிக்கோலஸ், அவரது மனைவி மற்றும் அவரது நண்பர் மார்க். கொலையாளியை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அது யார் என்று அவர்களுக்கு எப்படித் தெரிந்தது?


பதில்:

அவருடைய மருமகன் நிக்கோலஸ் தான் கொலையாளி, அந்த துண்டு காகிதத்தில் மிகத் தெளிவான துப்பு இருந்தது. காகிதத்தில் உள்ள இரசாயனப் பொருட்களின் சுருக்கங்களை நீங்கள் இணைத்தால், நீங்கள் ஒரு பெயரைப் பெறுவீர்கள்: Ni-C-O-La-S.


கடைசி வார்த்தைகள்:




ஒரு கையில் கேசட் ரெக்கார்டரும் மறு கையில் துப்பாக்கியும் இருந்த நிலையில் ஒருவர் தரையில் இறந்து கிடந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் ரெக்கார்டரை அழுத்தினர். அது இறந்தவரின் குரல். அவர், “எனக்கு வாழ்வதற்கு வேறு எதுவும் இல்லை. என்னால் இனி வாழ முடியாது,” என்று கூறியதும் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டுப் பார்த்த போலீஸாருக்குத் தெரிந்தது, இது தற்கொலை அல்ல கொலை என்று. எப்படி? 


பதில்:

இறந்தவர் தற்கொலை செய்து கொண்டால், போலீஸ் ரெக்கார்டரை அழுத்தியதும் அது ஆரம்பத்தில் இருந்து ஒலித்தது. அவர் பேசி முடித்ததும் துப்பாக்கியால் சுட்டும் சத்தம் கேட்டது அதனால் கேசட் ரெக்கார்டரில் உள்ள ரிவர்ஸ் பட்டனை அவரால் அழுத்தியிருக்க முடியாது. அதனால் அவர் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸ் கண்டுபிடித்தனர். 


நீதிமன்றத்தில் குற்றவாளி:




ஒரு பெண் தன் கணவனைக் கொன்றதற்காக நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் இருந்தாள். தான் குற்றவாளி இல்லை என்றும், அவர் இல்லாமல் தனிமையில் இருப்பதாகவும் கூறினார். இறுதி அறிக்கையில், அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் எழுந்து நின்று, “அவரது கணவர் காணாமல் தான் போயுள்ளார். எல்லோரும் நீதிமன்ற வாசலை பாருங்கள். அவர் சுமார் 30 வினாடிகளில் அந்த வழியாக நடந்து வர போகிறார்” என்று கூறினார்.

இந்த பெண்ணின் கணவர் கதவுகள் வழியாக நடந்து வருவதை பார்ப்பதற்காக அனைவரும் கதவுகளை வெறித்துப் பார்த்தனர். வழக்கறிஞரும் அந்தப் பெண்ணும் நீதிபதியை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

உடனே வழக்கறிஞர் “பாருங்கள்! அவள் தன் கணவனைக் கொன்றாள் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் அவள் கணவர் வருவார் என்று நம்பி அந்தக் கதவைப் பார்த்து கொண்டு இருக்கமாடீர்கள்!” என்று கூறி தனது இறுதி அறிக்கையை முடித்தார். 

இருந்தாலும் நீதிபதி அந்த பெண் தான் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். ஏன்?  


பதில்:

வழக்கறிஞர் வாசலை பார்க்க சொன்னதால் அனைவரும் வாசலை பார்த்து கொண்டு இருந்தார்கள், ஆனால் அந்தப் பெண் நீதிபதியை பார்த்துக்கொண்டு இருந்தாள். ஏனென்றால் அவள் கணவனைக் கொன்றதால் அவர் வரமாட்டார் என்று அவளுக்குத் தெரியும். அவள் சொன்னது போல் அவள் உண்மையில் அவன் இல்லாமல் தனிமையில் இறுத்து இருந்தால், அவள் கதவுகளை பார்த்துக் கொண்டிருந்துப்பாள்.

Comments

  1. அருமையான பதிவு....நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Kambu Koozh benefits and recipe in tamil - கம்பு கூழ் செய்வது எப்படி தமிழில்

புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்! - பகுதி 1 : Detective riddles part 1